search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடிகள் சிக்கினர்"

    ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்து காரில் ஆயுதங்களுடன் சுற்றிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சோமங்கலத்தை அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவன் லெனின் (28). பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் இவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    கூட்டாளிகளுடன் காரில் சுற்றி கைவரிசை காட்டும் இவன் படப்பை பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி. ராஜேஷ் கண்ணன், மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் தனிப்படை போலீசார் லெனினையும், அவனது கூட்டாளிகளையும் பிடிக்க வலைவிரித்தனர். இதன்படி ரவுடிகள் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார் துப்பாக்கி முனையில் லெனினை கைது செய்தனர்.

    அவனது கூட்டாளிகளான கரசங்கால் பகுதியை சேர்ந்த கோபி, எறுமையூர் பழனி, குரோம்பேட்டை ரகு ஆகியோரும் பிடிபட்டனர்.

    இவர்கள் பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் ஆகியவையும், காரில் பதுக்கி வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து 4 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர். போலீஸ் பிடியில் சிக்கிய போது ரவுடி லெனின் தப்பி ஓட முயன்றான். அப்போது கால்வாயில் தவறி விழுந்த அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து லெனினை ஆஸ்பத்திரியில் அனுமதித்து போலீசார் சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் அவர் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ரவுடிகள் பயன்படுத்திய ஸ்கார்பியோ காரில் ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியின் கார் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த ஸ்டிக்கரை ரவுடிகள் பல இடங்களில் தவறாக பயன்படுத்தி உள்ளனர். அது பற்றியும் விசாரணை நடக்கிறது. போலியாக எம்.எல்.ஏ. ஸ்டிக்கரை தயாரித்து ரவுடிகள் காரில் ஒட்டி உள்ளனர். இதன் பின்னணி குறித்தும் விசாரணை நடக்கிறது.

    ×